நல்லதொரு வீணை நான்….
நல்லதொரு வீணை நான் ….
நாதியின்றி புழுதியில் எரிக்கப்பட்ட
நல்லதொரு வீணை நான் !
வாரணமாயிரம் சூழ வர
பாமரராயிரம் பலி விட்ட
தேமதுரத் தமிழினம் நான்
வந்தாரை வாழ வைத்தே
பெற்றாரைச் சாக வைத்த
பேரினப் பெருமை நான்
கல் தோன்ற மண் தோன்ற
உயிர்களவாடி தான் தோன்ற
சகித்த சாவு நான்
அக்னிக் குஞ்சு நான் ….
பகைவனின் எச்சத்தில் கரியான
அக்னிக் குஞ்சு நான் !!
அன்பே சிவம் நான்
ஆழியில் அழுகின்ற
அன்புச் சவம் நான் …
____________________________________________________________________________________________
சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..


super a irukku. azhagu, vegam,oru kobam , theviviram therigirathu.
Tamil la type panrathukku font install pannalenga. inga blogger open agala. sari pannina pinnadi tamil la than ennoda comments irukkum.
நன்றி கவி..
ஆமா என்ன ஆனது உங்களது பிரச்சனை ? இன்னும் சரி ஆகா வில்லையா ? …அப்புறம் தமிழ்ல எழுத நீங்க http://www.google.com/transliterate/indic/TAMIL பயன் படுத்தலாம் .
arumaiyana velipaadu, ennkulaiyum erukeerathu intha kovam,,,,
என்செய்வது நண்பரே ..செயல்பாடற்ற கோபமாக உள்ளதே ..உங்களது வருகைக்கு நன்றி ..மீண்டும் மீண்டும் வாருங்கள்..
செம்மொழி தமிழுக்கு அழிவில்லை.தமிழனுக்குள் அழிவில்லை.நம்புவோம்.
புத்தனின் போதனைகள் மறந்த பித்தர்கள்தான் சவமாவார்கள்.
அதர்மம் வென்றதாய் சரித்திரமேயில்லை.